இந்தியாவில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த நக்சலைட் மாவோயிஸ்ட் கிளர்ச்சியின் எஞ்சிய தலைவர்களில் முக்கியமானவரான மிசிர் பெஸ்ரா என்பவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான இவரை, ஜார்கண்ட் மாநிலத்தின் தன்வாத் மாவட்ட காடுகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜார்கண்ட் காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மாவோயிஸ்ட் கிளர்ச்சியைத் தோற்கடித்துவிட்டதாக இந்தியா அறிவித்திருந்த நிலையில், எஞ்சியிருக்கும் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரைக் குறித்த தகவல்களுக்கு 10 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








