Jun 18, 2026
Thisaigal NewsYouTube
ஷாக்கிங் நியூஸ்! சேலத்தில் நடைபயிற்சிக்கு சென்ற அதிமுக பிரமுகர் மர்ம மரணம்! நடந்தது என்ன?
உலகச் செய்திகள்

ஷாக்கிங் நியூஸ்! சேலத்தில் நடைபயிற்சிக்கு சென்ற அதிமுக பிரமுகர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

Share:

ஆகஸ்ட் 29-

சேலம் அருகே நடைபயிற்சி சென்ற அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலம் அருகே நடைபயிற்சிக்கு சென்ற அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (49). இவர் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு நடைபயிற்சி சென்ற அவர் அதிகாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது அதிகாலை 5 மணியளவில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவரது மரணம் தொடர்பான மர்மம் விலகும். உயிரிழந்த ரவி அதிமுகவின் கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை