Apr 19, 2026
Thisaigal NewsYouTube
 இலங்கை பெருந்தோட்ட சமூகம்.. வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு - ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்
உலகச் செய்திகள்

 இலங்கை பெருந்தோட்ட சமூகம்.. வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு - ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்

Share:

இலங்கை, ஜூன் 22-

கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் தோட்ட தொழிலார்களாக பணியாற்றி வரும் தமிழினம் குறித்து பல தகவல்களை நாம் அறிந்திருப்போம்.

அண்டை நாடான இலங்கையில் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய தமிழர்களை குறிப்பிடும் வகையில் கடந்த இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு சமூகம் தான் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம். இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்று அங்கு இருக்கும் தேயிலை தோட்டங்களிலும், காடுகளிலும் உழைத்து வரும் தமிழர்கள் இன்றளவும் அங்கு உள்ளனர்.

அவர்களுக்கான ஒரு அமைப்பாக இது பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் சார்பாக அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீடுகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இந்த இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்திற்கு இந்திய அரசு இன்றளவும் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை, முதல் நினைவு முத்திரையாக இலங்கை அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான இந்த முதல் நினைவு மூத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கி இலங்கை அரசு கௌரவித்துள்ளது.

தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளதை அறிந்து, அவரது ரசிகர்களை அதை கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் இரு நூற்றாண்டுகளாக தமிழர்கள் தோட்ட தொழிலார்களாக அங்கு வசித்து வந்தாலும், சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சனைகளை அவர்கள் அங்கு சந்தித்தும் வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு