Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: சிறுவனுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை
உலகச் செய்திகள்

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: சிறுவனுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை

Share:

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அப்பலாச்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட 16 வயது சிறுவன் கோல்ட் கிரேய்க்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தையின் மூலம் பரிசாகப் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த கொடூரத் தாக்குதலை நடத்திய அப்போதைய 14 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புகழுக்காகவும் பிரபலத்திற்காகவுமே இச்செயலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பள்ளிகளில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் மற்றும் இதுபோன்ற வழக்குகளில் பெற்றோர்களின் பொறுப்புணர்வின்மை குறித்தான விவாதங்கள் இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Related News