Jun 27, 2026
Thisaigal NewsYouTube
அரசு அதிகாரிகள் போல் நாடகமாடி பண மோசடி: சிங்கப்பூரில் 4 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
உலகச் செய்திகள்

அரசு அதிகாரிகள் போல் நாடகமாடி பண மோசடி: சிங்கப்பூரில் 4 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

சிங்கப்பூர், ஜனவரி.21-

அரசு அதிகாரிகள் போல் நாடகமாடி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு மலேசியர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.

நான்கு தனித்தனி சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகளின் படி, சிங்கப்பூர் மோசடி தடுப்பு அதிகாரிகள், மலேசிய வர்த்தக குற்றப் புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இந்த நால்வரும் தனித்தனியாக, சிங்கப்பூர்வாசிகளிடம் பண மோசடியில் ஈடுபட்டு, பல மில்லியன் டாலர்களை மோசடி செய்துள்ளதாக அவர்கள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அதே வேளையில், சிங்கப்பூரில் இது போன்ற மோசடிகளுக்கு ஆளானவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேகரிப்பதற்காக மலேசியர்கள், சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, சிங்கப்பூரில் ஆறு முதல் 24 பிரம்படிகள் வரை கட்டாயத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!