லண்டன், ஆகஸ்ட்.25-
லண்டனில் இந்திய உணகத்திற்குத் தீ வைக்கப்பட்டதில் ஐவர் காயமுற்றனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கிழக்கு லண்டனில் அந்த இந்திய உணவகம் (இண்டியன் அரோமா) செயல்பட்டு வருகிறது. காயமுற்ற ஐவரில் மூவர் ஆண்கள், மேலும் இருவர் பெண்கள். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர். சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.