தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான வாட் தாத் தொங் பௌத்த கோயிலில் நடைபெற்ற பழுதுபார்ப்புப் பணியின் போது, பிரார்த்தனை மண்டபத்தின் தரையின் அடியில் மரப்பெட்டிக்குள் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் தளத்தை உயர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, கான்கிரீட் தொகுதிக்கு அடியில் அழுகிய நிலையில் இருந்த சிவப்பு நிற மரப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
பெட்டியின் உள்ளே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் பெண் எலும்புக்கூட்டுடன், துருப்பிடிக்காத எஃகு தட்டு மற்றும் 1957 ஆம் ஆண்டைச் சேர்ந்த நான்கு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








