நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றியினை பெற்றது. வசூல் ரீதியிலும் ரூ.630 கோடியை தாண்டி சாதனை படைத்தது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் சுனில் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் வர்மாவாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
'மனசுலாயோ' என அவர் பேசி நடித்த வசனம் சமூக வலைதளங்களில் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது. இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்துக்காக ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.