Oct 21, 2025
Thisaigal NewsYouTube
தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் ஜமா திரைப்படம் எப்படி இருக்கிறது?
சினிமா

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் ஜமா திரைப்படம் எப்படி இருக்கிறது?

Share:

ஆகஸ்ட் 07-

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் நடித்து இயக்கியுள்ள ‘ஜமா’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ‘கூழாங்கல் விஷனரிஸ்’ தயாரித்துள்ளது. கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், அம்மு அபிராமி, வசந்த் மாரிமுத்து, மணிமேகலை உட்பட பலர் நடித்துள்ளனர்.

கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) பெண் வேடமிட்டு நடித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). எப்போதும் திரௌபதி வேடமே அவருக்குத் தரப்படுகிறது. பெண் வேடமிட்டு நடிப்பதால் தன் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என வேதனைப்படுகிறார் கல்யாணத்தின் தாய். இதனால், பெண் வேடம் அணியாமல் அர்ஜுனன் வேடத்தில் நடிக்குமாறு அவருடைய தாய் கூறுகிறார்.

கூத்து மீது தான் கொண்ட காதலுக்காகப் பல இடங்களில், குறிப்பாக வாத்தியார் தாண்டவத்திடம் அவமானப்படும் கல்யாணம், இறுதியில் அர்ஜுனன் வேடமிட்டாரா என்பதுதான் ‘ஜமா’. தெருக்கூத்து கலைஞரான தன் தந்தையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க தானே ஒரு ‘ஜமா’ அமைக்க போராடுகிறார் கதாநாயகன். இடையே, தாண்டவத்தின் மகள் ஜெகாவுடனான (அம்மு அபிராமி) காதல் என்னவானது என்பதும் கதையில் பேசப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

அறிமுக நடிகரின் தேர்ந்த நடிப்பு
நெகிழ வைத்த கிளைமாக்ஸ்

Related News