இந்தியா, ஜுன் 27 -
அஜித் பற்றி நடராஜன் நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் அவரது எளிமையையும் அனைவரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளும் பண்பையும் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது பிறந்தநாளைக் கொண்டாட்டினார். அந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
நடராஜனும் அஜித்தும் சந்தித்துக்கொண்டது பற்றி நடராஜன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
"அன்று எனக்கு பிறந்தநாள் என்று சொன்னதும், உடனே கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. அஜித்தை முதல் முறையாக நேரில் சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அஜித் ரொம்ப எளிமையாக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னுடைய கார் உட்பட அனைவரின் கார் கதவையும் திறந்து வழியனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது" என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.