Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இராணுவத் தரைப்படை குத்தகையில் ஊழல்: 26 நிறுவனங்களிடம் எஸ்பிஆர்எம் விசாரணை
தற்போதைய செய்திகள்

இராணுவத் தரைப்படை குத்தகையில் ஊழல்: 26 நிறுவனங்களிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.05-

மலேசியத் தரைப்படையின் குத்தகைகளில் நிலவும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக, சுமார் 26 நிறுவனங்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தரைப்படைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான குத்தகைகளைப் பெறுவதற்கு, சில நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக கடந்த வாரம் தரைப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உட்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குத்தகை நடைமுறைகளில் முறையற்ற வழிகளில் நுழைந்ததாகக் கருதப்படும் 26 தனியார் நிறுவனங்களின் ஆவணங்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

ஜம்ரி வினோத், தமிம் தாரி மீதான விசாரணைகள் நிறைவு / இருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ஐஜிபி காலிட் தகவல்

ஜம்ரி வினோத், தமிம் தாரி மீதான விசாரணைகள் நிறைவு / இருவரும் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ஐஜிபி காலிட் தகவல்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் ஆலய உடைப்பு பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் ஆலய உடைப்பு பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

இந்து ஆலய நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க 6 மாத கால அவகாசம் தேவை – பிரதமர் அலுவலகத்தில் முன்மொழிவு சமர்ப்பிப்பு

இந்து ஆலய நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க 6 மாத கால அவகாசம் தேவை – பிரதமர் அலுவலகத்தில் முன்மொழிவு சமர்ப்பிப்பு