மெக்கா-விலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த மலேசிய யாத்திரீகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
சுமார் 70 மலேசிய யாத்திரீகர்கள் தங்கியிருந்த மீரா அஜ்யாத் என்ற அந்த தங்கும்விடுதியில், உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜெட்டாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் சவுதி அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தீவிபத்து குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நாசவேலையோ அல்லது டிரோன் தாக்குதலோ நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.








