May 3, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கடை வீடு ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, மார்பில் குத்துக்காயங்களுடன் உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

50 வயதுடைய அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் சுயநினைவிழந்த கிடந்ததை பார்த்த ஒருவர், பிற்பகல் 2.20 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சம்சுதீன் மாமட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மார்பில் ஏற்பட்ட குத்துக்காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, இன்று சனிக்கிழமை சவப்பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related News