பாகோ பல்கலைக்கழகம் அருகே, வெள்ளிக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், 19 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 8.10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக, முவார் மாவட்ட போலீஸ் தலைவர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
32 வயதான உள்ளூர் பெண் செலுத்திய அந்த காரானது, திடீரென வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு மாறிய போது இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ராயிஸ் முக்லிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கானது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








