Mar 14, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் ஆலய உடைப்பு பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

ரவாங் உச்சிமலை முனீஸ்வரன் ஆலய உடைப்பு பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

Share:

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்தை உடைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு செலாயாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, யாயாசன் குப்ரா அமைப்பானது இடிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் அவ்விடத்தில் அமைந்துள்ள அந்த ஆலயமானது, கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய உரிமையாளர் வசம் சென்றுள்ளதாக மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி சாய் குவான் ஹாக் தெரிவித்துள்ளார்.

நிலைமை சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அந்த இடம் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது வரும் ஜூன் 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும், அதுவரை ஸ்டேட்டஸ் குவோ என்ற தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்