May 6, 2026
Thisaigal NewsYouTube
1.1 பில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பான விசாரணை - 3-வது நாளாக ரஃபிஸி ராமிலிடம் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

1.1 பில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பான விசாரணை - 3-வது நாளாக ரஃபிஸி ராமிலிடம் வாக்குமூலம்

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராமிலிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமையகத்தில் இன்று மூன்றாவது நாளாகத் தனது விசாரணையைத் தொடர்ந்துள்ளது.

பொருளாதார அமைச்சிற்கும் 'ஆர்ம் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்திற்கும் இடையிலான 1.1 பில்லியன் ரிங்கிட் மென்பொருள் முதலீட்டு விவகாரத்தில், அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் புகாரில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய PKR கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி, இந்த விசாரணை ஊழல் அல்லது பணப் பரிமாற்றம் தொடர்பானது அல்ல என்றும், அரசாங்க நடைமுறைகள் குறித்தது மட்டுமே என்றும் விளக்கமளித்தார். தன்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே எமது நோக்கம் என்றும், இத்தகைய விசாரணைகள் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், உண்மை விரைவில் வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related News