லங்காவி, டிச.9-
லங்காவி, ஜாலான் பந்தாய் செனாங்கில் நேற்றிரவு 8 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு உணவகங்கள் அழிந்தன. பாடாங் மாட் சீராட் மற்றும் பெர்சியாரான் புத்ரா ஆகிய நிலையங்களிலிருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகளுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இத்தீவிபத்தில் ஓர் உணவகம் 100 விழுக்காடு அழிந்த வேளையில் மற்றொரு உணவகம் 90 விழுக்காடு சேதமுற்றதாக லங்காவி தீயணைப்பு மீட்புப்படை இலாகா தலைவர் முகமட் ஜம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.








