கோலாலம்பூரை பசுமை நகரமாக மாற்றும் நோக்கில், ஏழு கால்பந்து மைதானங்களின் பரப்பளவைக் கொண்ட மேலும் 9 திறந்தவெளி இடங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் கோலாலம்பூர் முழுவதும் அரசிதழில் பதிவு செய்யப்பட்ட பொது இடங்களின் எண்ணிக்கை 552-ஆக உயர்ந்துள்ளதாகக் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். பத்து, ஸ்தாபாக், பெட்டாலிங் மற்றும் கோலாலம்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் இதில் அடங்கும்.
நகர்ப்புற வளர்ச்சியோடு சேர்த்து பொதுமக்களின் பொழுதுபோக்கு இடங்களைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்த நிலங்கள் வணிக நோக்கங்களுக்காக மாற்றப்படுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று அமைச்சர் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.








