தேசியத் தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 100 ரிங்கிட் 'சாரா' நிதியுதவி வழங்கப்படும் எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை நிதி அமைச்சு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் உலா வரும் போஸ்டர் முற்றிலும் போலியானது என்று எச்சரித்துள்ள நிதி அமைச்சு, இத்தகைய நிதியுதவி குறித்து அரசாங்கம் எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் இது போன்ற தவறான மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் போலிச் செய்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களின் வாயிலாக மட்டுமே உண்மையான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








