Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்  அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

Share:

மாணவர்கள் பயிலும் பள்ளி எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான ஏதுவான கற்றல் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

இன்று ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாமில் நடைபெற்ற SJKC Eco Grandeur பள்ளிக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பள்ளிப் பாடத் திட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக இந்த ஏதுவான கற்றல் சூழல் விளங்கும் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பள்ளிகளின் கட்டுமான அனுமதி அதிகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 38 புதிய பள்ளிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுமார் 18 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் இப்பள்ளியில் தடையற்ற நடமாட்டத்திற்கான பிரத்தியேக சாய்தள அமைப்பு உட்பட ஆசியாவிலேயே முதன்முறையாகப் பல நவீனப் பாதுகாப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது