சபாவைச் சேர்ந்த மூன்று மலேசியப் பெண்கள், போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை மலேசியப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
30 முதல் 39 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்கள் கோத்தா கினபாலுவிலிருந்து ஜகார்த்தா வந்தடைந்த போது, அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த இந்தோனேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைச் சோதனையிட்டனர். அவர்களது உடமைகள், ஆடைகள் மற்றும் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகெயின், எக்ஸ்டசி மற்றும் கெத்தமின் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
கைதானவர்களில் இருவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவு குறைவாக இருப்பதால், அது சுய பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படுவதாக டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.








