May 5, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

Share:

சிரம்பான், ஜனவரி.28-

சிரம்பானில் தனது தாயாரால் மறந்து விடப்பட்டு, 9 மணி நேரமாக காரினுள் இருந்த இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

நேற்று காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில், குழந்தையைக் காரினுள் மறந்து விட்டு சென்ற அதன் தாயார், மாலை 5 மணியளவிலேயே குழந்தையைப் பற்றிய நினைவுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, மாலை 6.15 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கார் நிறுத்துமிடத்திற்குச் சென்ற போலீசார், சுயநினைவிழந்த நிலையில் கிடந்த அக்குழந்தையை மீட்டுள்ளனர்.

வழக்கமாகக் காலையில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்குச் செல்லும் அவர், நேற்று அதனைச் செய்ய மறந்து விட்டதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், குழந்தையைப் புறக்கணித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்தத் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே வேளையில், உயிரிழந்த குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்