Jan 28, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

Share:

சிரம்பான், ஜனவரி.28-

சிரம்பானில் தனது தாயாரால் மறந்து விடப்பட்டு, 9 மணி நேரமாக காரினுள் இருந்த இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

நேற்று காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில், குழந்தையைக் காரினுள் மறந்து விட்டு சென்ற அதன் தாயார், மாலை 5 மணியளவிலேயே குழந்தையைப் பற்றிய நினைவுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, மாலை 6.15 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கார் நிறுத்துமிடத்திற்குச் சென்ற போலீசார், சுயநினைவிழந்த நிலையில் கிடந்த அக்குழந்தையை மீட்டுள்ளனர்.

வழக்கமாகக் காலையில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு வேலைக்குச் செல்லும் அவர், நேற்று அதனைச் செய்ய மறந்து விட்டதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், குழந்தையைப் புறக்கணித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்தத் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே வேளையில், உயிரிழந்த குழந்தையின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி