Jan 28, 2026
Thisaigal NewsYouTube
வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.28-

ஜோகூரில் வட்டி முதலைகளுக்காக தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

25 மற்றும் 26 வயதுடைய அவர்கள் இருவரையும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, செகாமாட்டில் உள்ள வீடு ஒன்றில் தீ வைக்க முயன்ற போது போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்றைய தினம் வழக்கமான சாலைப் பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட அந்த இருவரையும் விசாரணை செய்த போது, அவர்களின் சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது.

அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், மிரட்டல் குறிப்பு உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த இருவரும் ஶ்ரீ அலாம், பத்து பஹாட், மூவார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தீவைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அப்துல் ரஹமான் அர்சாட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி