Jan 28, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவில், திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மசோதாவானது, அதன் இறுதிக் கட்ட ஆய்வில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் சைஃபுடின், அமைச்சு, சட்டத்துறை அலுவலகம் மற்றும் போலீசார் அதனை விரிவாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காக, சொஸ்மா சட்டத்தைச் சீர்திருத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சொஸ்மா சட்டத்தில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் விளக்கம் கேட்டிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வட்டி முதலைகளுக்காக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

"ரஃபிஸி தனது மகன் மீதான தாக்குதல் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிரக் கூடாது": உள்துறை அமைச்சர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சேர்ந்த மூவரும் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டனர்

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி

மனித வள அமைச்சின் கீழ் மித்ரா: பிரதமருக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் நன்றி