May 5, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டதிருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவில், திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மசோதாவானது, அதன் இறுதிக் கட்ட ஆய்வில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் சைஃபுடின், அமைச்சு, சட்டத்துறை அலுவலகம் மற்றும் போலீசார் அதனை விரிவாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காக, சொஸ்மா சட்டத்தைச் சீர்திருத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சொஸ்மா சட்டத்தில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் விளக்கம் கேட்டிருந்தார்.

அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்