கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில், பொது மக்களுக்குச் சொந்தமான 1,120 கோடி வெள்ளி இன்னுமும் கோரப்படாமல் இருப்பதாக துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு துறையிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 1,120 கோடி வெள்ளி கோரப்படாத தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை அமைச்சர் விளக்கினார். அதில் 70 விழுக்காடு, ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் உள்ள பணமாகும் என்று அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.
தேசிய கணக்காய்வு துறையின் போர்டல் மூலம் கோரப்படாமல் இருக்கும் பணத்தைச் சரிபார்க்குமாறும், அப்பணத்தை கோருவதற்கு வழங்கப்பட்ட ஆவணங்களைப் பூர்த்தி செய்தால் பதினான்கு முதல் முப்பது நாட்களுக்குள் அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


