Mar 13, 2026
Thisaigal NewsYouTube
6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

Share:

கிள்ளான், ஜனவரி.21-

கடந்த வாரம் கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியா பகுதியில் ஆறு வீடுகளுக்குத் தீ வைத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 44 வயதுடைய வேலையற்ற நபர் ஒருவர் இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

44 வயது ஜெஃப்ரி ஜோஹார் என்ற அந்த நபர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. நீதிபதி Syarifah Hascindie Syed Omar முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மதியம் 2:00 மணி முதல் 2:30 மணிக்குள், கிள்ளான், ஜோஹான் செத்தியா பகுதியில் உள்ள ஆறு குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான வீடுகளுக்குத் தீ வைத்து சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன