May 3, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

Share:

புக்கிட் காயு ஹித்தாம், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் கொமாண்டர் நாசருதீன் நசீரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொது செயல்பாட்டு படை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான கார்ப்பரல் பதவியிலுள்ள அந்நபர், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில், சம்பவம் நடப்பதற்கு சுமார் 4 முதல் 5 மணி நேரங்களுக்கு முன்பு, ‘கேங் பாக் சூ’ எனப்படும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் காணப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கடத்தல் கும்பலுடன் சேர்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்திய அந்நபர், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முன்பே அறிந்திருக்கக் கூடும் என்றும் அட்ஸ்லி அபு ஷா குறிப்பிட்டுள்ளார்.

Related News