மேற்காசியாவில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து மலேசியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையானது வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இதனையடுத்து, சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் சிக்கியிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜெத்தாவில் இருந்து புறப்பட்ட வெளியேற்ற விமானம், அங்கு சிக்கியிருந்த மலேசியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு கொண்டு வந்ததாக நேற்று வியாழக்கிழமை ஜெத்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவசரநிலையை சமாளிக்க தொடங்கப்பட்ட 24 மணி நேர செயல்பாட்டு அறை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.








