கடந்த மாதம் செராஸ் தாமான் மிடா பகுதியில் நடந்த வழிப்பறிக் கொள்ளையில், ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
27 மற்றும் 28 வயதுடைய அவர்கள் இருவரும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, மதியம் 1.59 மணியளவில், நடந்த இக்கொள்ளைச் சம்பவத்தில், 2000 ரிங்கிட்டை இழந்த அப்பெண்ணுக்கு, கை, கால், முழங்கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 394-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








