பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்த மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சான்ரியா எங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒசாகா மிருகக்காட்சி சாலையானது, மலேசியாவிலிருந்து யானைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தமானது தைப்பிங் மிருகக்காட்சிசாலை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிட்டன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாவும் சான்ரியா எங் தெரிவித்துள்ளார்.








