May 20, 2026
Thisaigal NewsYouTube
பேரிடர் மீட்பு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது- நட்மா கூறுகிறது
தற்போதைய செய்திகள்

பேரிடர் மீட்பு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது- நட்மா கூறுகிறது

Share:

பேரிடர் காலத்தை எதிர்கொள்வதில் தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவனமான நட்மாவுக்கும் , இதர மீட்பு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ கலிருல் ஷஹ்ரில் இட்ருஸ் கூறினார்.

வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னரே தேவையான
முன்னேற்பாடுகள் செய்யப்படு விட்டதாக கூறிய அவர், மீட்பு
நடவடிக்கைகளுக்கான சீரான செயலாக்க நடைமுறையின் தரம்
உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பொது உத்தரவு எண். 20 க்கு ஏற்ப அனைத்து மீட்பு நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு செயல்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

Related News