Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்
தற்போதைய செய்திகள்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

Share:

குவாந்தான், டிசம்பர்.02-

2025 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் அமர்வதற்கு கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட மாணவன், பாதுகாப்பாக உள்ளான் என்று பகாங் மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் அந்த மாணவனின் வீட்டிற்குச் செல்லும் பாதை வெள்ளக்காடாக மாறியது. இதனால், தாம் தங்கியிருந்த பள்ளியின் தங்கும் விடுதிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ? திங்கட்கிழமை எஸ்பிஎம் சோதனையில் அமர முடியாமல் போய்விடுமோ என்று அந்த மாணவன் அச்சம் அடைந்துள்ளான்.

இதன் காரணமாக அந்த மாணவன் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் கரைபுரண்டோடிய வெள்ள நீரில் நீந்தி, பிரதானப் பாதைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவன் தற்போது கோல லிப்பிஸ், கோல லானார் தேசிய இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் பாதுகாப்பாக உள்ளான். மற்ற மாணவர்களுடன் தொடர்ந்து வரும் எஸ்பிஎம் தேர்வின் இதர சோதனைகளிலும் அமர்வதற்குத் தயாராக உள்ளான் என்று பகாங் கல்வி இலாகா இன்று வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு