May 6, 2026
Thisaigal NewsYouTube
கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்
தற்போதைய செய்திகள்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

Share:

குவாந்தான், டிசம்பர்.02-

2025 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் அமர்வதற்கு கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட மாணவன், பாதுகாப்பாக உள்ளான் என்று பகாங் மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் அந்த மாணவனின் வீட்டிற்குச் செல்லும் பாதை வெள்ளக்காடாக மாறியது. இதனால், தாம் தங்கியிருந்த பள்ளியின் தங்கும் விடுதிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ? திங்கட்கிழமை எஸ்பிஎம் சோதனையில் அமர முடியாமல் போய்விடுமோ என்று அந்த மாணவன் அச்சம் அடைந்துள்ளான்.

இதன் காரணமாக அந்த மாணவன் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் கரைபுரண்டோடிய வெள்ள நீரில் நீந்தி, பிரதானப் பாதைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவன் தற்போது கோல லிப்பிஸ், கோல லானார் தேசிய இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியில் பாதுகாப்பாக உள்ளான். மற்ற மாணவர்களுடன் தொடர்ந்து வரும் எஸ்பிஎம் தேர்வின் இதர சோதனைகளிலும் அமர்வதற்குத் தயாராக உள்ளான் என்று பகாங் கல்வி இலாகா இன்று வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்