நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வரி புதுப்பிக்கப்படாத 15 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சாலை போக்குவரத்துத் துறையின் தரவுத் தளத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பதிவுச் செய்யப்பட்டிருந்த 41 மில்லியன் வாகனங்களில் அவை சுமார் 37 விழுக்காடாகும். அவற்றில் சில வாகனங்கள் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என JPJ தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட 15 மில்லியன் வாகனங்களில் மிக அதிகமாக 9.76 மில்லியன், மோட்டார் சைக்கிள்கள். மற்றவை கார்கள், பேருந்துகள், டெக்சிகள், வாடகைக் கார்கள் மற்றும் பிற வாகனங்களாகும்.
இவ்வேளையில், கைவிடப்பட்ட வாகனங்களை முறையாக அகற்ற வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது. அதே சமயம் அவற்றைத் தரவுத் தளத்தில் இருந்து நீக்க வேண்டியிருப்பதாகவும் JPJ குறிப்பிட்டது.








