நோன்புப் பெருநாளையொட்டி அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு இதுவரை போதுமான அளவில் இருக்கிறது. அதே வேளை அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய விவசாயச் சந்தை வாரியம் உத்தரவாதம் அளித்துள்ளது.
வெளியே போர் நடந்து கொண்டிருந்தாலும், இதுவரை அனைத்தும் சுமூகமாகவே இருக்கிறது. எனவே பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களைப் வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என FAMA தலைவர் அமினுடின் சுல்கிப்லி தெரிவித்தார்.
இதனிடையே விலைக் கட்டுப்படுத்த பொருட்களின் விற்பனை சீராக உள்ளது. வணிகர்கள் விலைக் கட்டுப்பாட்டை பின்பற்றி வருகின்றனர். இதுவரை புகார்கள் ஏதும் எல்லை என அமினுடின் கூறினார்.








