சிப்பாங், சுங்கை பீலெக், தாமான் அமான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில், போலீசார் சாதகமான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
எனினும், தற்போதைக்கு இது குறித்த மேலதிக விவரங்களை வெளியிட இயலாது என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இவ்விசாரணையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஆயுதம் ஏந்திய நான்கு கொள்ளையர்கள் வீடு ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த 35 வயது ஆடவரைத் தாக்கி, அவரின் குடும்பத்தினரிடம் கொள்ளையடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் காயமடைந்த நிலையில், சிரம்பான் துவான்கு ஜாஃபர் துவான்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
தற்போது அந்த 4 கொள்ளையர்களையும் பிடிக்கும் முயற்சி போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.








