Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.06-

ஜொகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. பத்து பாஹாட்டில் மாலை 4 மணி நிலவரப்படி 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கம்போங் பஹாரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஶ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

சபாவில், கினபாதாஙான் பகுதியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 138 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புக்கிட் காராம் தேசியப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 29 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் அங்கு தங்கியிருந்தனர். தொடர் மழையாலும் ஆற்று நீர் ஆபத்தான அளவை எட்டியதாலும், கினபாதாஙான் ஏப்ரல் 2-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி