Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.06-

ஜொகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. பத்து பாஹாட்டில் மாலை 4 மணி நிலவரப்படி 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கம்போங் பஹாரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஶ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

சபாவில், கினபாதாஙான் பகுதியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 138 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புக்கிட் காராம் தேசியப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 29 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் அங்கு தங்கியிருந்தனர். தொடர் மழையாலும் ஆற்று நீர் ஆபத்தான அளவை எட்டியதாலும், கினபாதாஙான் ஏப்ரல் 2-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்