May 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.06-

ஜொகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. பத்து பாஹாட்டில் மாலை 4 மணி நிலவரப்படி 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கம்போங் பஹாரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஶ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

சபாவில், கினபாதாஙான் பகுதியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 138 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புக்கிட் காராம் தேசியப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 29 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் அங்கு தங்கியிருந்தனர். தொடர் மழையாலும் ஆற்று நீர் ஆபத்தான அளவை எட்டியதாலும், கினபாதாஙான் ஏப்ரல் 2-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்