வோங் சென், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதுடன், சுபாங் நாடாளுமன்றத் தொகுதியையும் காலி செய்துள்ளார். அவரது பதவி விலகல் இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வருகிறது.
2018-ஆம் ஆண்டு முதல் சுபாங் தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த வோங் சென், 2018 மற்றும் 2022 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்டு தொகுதியைத் தக்கவைத்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துலிடம் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தையும் அவர் ஃபேஸ்புக்-ல் வெளியிட்டுள்ளார்.








