முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கு, தனிநபர்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பிணையாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவிற்குத் தலைமையேற்ற டத்தோ வி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட யாரும், சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்ற ஒரு தெளிவான செய்தியை SRC International வழக்கு புகட்டியுள்ளது என்று டத்தோ சிதம்பரம் குறிப்பிட்டார்.
SRC International வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நஜீப் செய்து கொண்ட சீராய்வு மனு, கூட்டரசு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ சிதம்பரம் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைப் புரிகின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. அத்தகைய குற்றவாளிகளைச், சட்டம் விரட்டிச் சென்று தண்டிக்கும் என்பதற்கு SRC International வழக்கு ஒரு சான்றாகும் என்று டத்தோ சிதம்பரம் நினைவுறுத்தினார்.

தற்போதைய செய்திகள்
SRC International வழக்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். டத்தோ வி.சிதம்பரம் திட்டவட்டம்
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


