Jun 15, 2026
Thisaigal NewsYouTube
SRC International வழக்கு  அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். டத்தோ வி.சிதம்பரம் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

SRC International வழக்கு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். டத்தோ வி.சிதம்பரம் திட்டவட்டம்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கு, தனிநபர்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பிணையாகும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவிற்குத் தலைமையேற்ற டத்தோ வி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட யாரும், சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்ற ஒரு தெளிவான செய்தியை SRC International வழக்கு புகட்டியுள்ளது என்று டத்தோ சிதம்பரம் குறிப்பிட்டார்.

SRC International வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நஜீப் செய்து கொண்ட சீராய்வு மனு, கூட்டரசு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைப் புரிகின்றவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. அத்தகைய குற்றவாளிகளைச், சட்டம் விரட்டிச் சென்று தண்டிக்கும் என்பதற்கு SRC International வழக்கு ஒரு சான்றாகும் என்று டத்தோ சிதம்பரம் நினைவுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்