ஈப்போ, மார்ச்.10-
தெலுக் இந்தான் பகுதியில் நேற்று நிகழ்ந்த தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு பனை எண்ணெய் தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
18 வயதுடைய Adham Faisal என்ற அம்மாணவர், கழுத்துப் பகுதியில் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.
இன்று தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை இந்த தடுப்புக் காவலானது அமலில் இருக்கும் என தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நைடாதுல் அதிரா அஸ்மான் உத்தவிட்டுள்ளார்.
முன்னதாக 39 மற்றும் 52 வயதுடைய இரு சந்தேக நபர்களும் இன்று காலை 9 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.








