May 4, 2026
Thisaigal NewsYouTube
சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

Share:

சபாக் பெர்னாம், மார்ச்.10-

சபாக் பெர்னாம், சுங்கை ஆயர் தாவார் பகுதியில் நேற்று இரவு Tarawih தொழுகைக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற 14 வயது மாணவர் ஒருவர், பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.

ஜாலான் கம்போங் டத்தோ ஹோர்மாட் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அந்த மாணவர், சபாக் பெர்ணம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரவு 9.14 மணியளவில் காலமானார்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால் தகவல் வழங்கி விசாரணைக்கு உதவுமாறு சபாக் பெர்னாம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Md Yusof Ahmad கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News