Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் ஆயுதப்படைத் தளபதி ஹஷிம் அலி காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் ஆயுதப்படைத் தளபதி ஹஷிம் அலி காலமானார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

முன்னாள் ஆயுதப்படைத் தளபதியும், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா அலியின் சகோதரருமான துன் டாக்டர் முகமட் ஹஷிம் அலி காலமானார். அவருக்கு வயது 90.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர், கிளேனிகல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஹஷிம் அலி, இன்று முற்பகல் 11.50 மணியளவில் தனது இறுதி மூச்சை விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹஷிம் அலியின் நல்லுடன், முழு இராணுவ மரியாதையுடன் கோலாலம்பூர், சுங்கை பீசி, ரௌடாதுல் சகினா முஸ்லிம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி, தனது ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு மலேசிய அ ரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கும் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தாய்லாந்து, Hat Yai –யில் நடைபெற்ற வரலாற்றுப்பூர்வமான அமைதி ஒப்பந்தத்தில் மலேசியாவின் ஆயுதப்படை தளபதி என்ற முறையில் கையெழுத்திட்ட பெருமை மறைந்த ஹஷிம் அலியையே சாரும்.

1998 ஆம் ஆண்டு மலேசியா முதல் முறையாக அனைத்துலக அளவில் ஏற்று நடத்திய கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் துணை புரிந்த சுகோம் நைய்ண்டி ஏட் பெர்ஹாட்டின் தலைவராகவும் ஹஷிம் அலி சீரிய பங்களிப்பை வழங்கினார் என்பது வரலாறாகும்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்