Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ ஒன்றில் நேற்று இரவு வெடிகுண்டு புரளியினால் விமானப் போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது.

குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய விமானங்கள், வெடிகுண்டு புரளியால் மிகக் காலத் தாமதமாகப் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக முகப்பிடங்களும், விமானப் புறப்பாடு நுழைவாயில்களும் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதால் பயணிகளும் பெரும் தடுமாற்றத்திற்கு ஆளாகினர்.

வெடிகுண்டு புரளியைக் கிளப்பியதாகக் கூறப்படும் குறும்புக்கார பயணி ஒருவர், பின்னர் வளைத்துப் பிடிக்கப்பட்டது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேஎல்ஐஏ நிர்வாகம் தெரிவித்தது.

கேஎல்ஐஏ டெர்மினல் 1, நேற்று மாலை 5.32 மணிக்கு வெடிகுண்டு தொடர்பில் தகவல் பெற்றது. இதனைத் தொடர்ந்து விமானப் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் போலீஸ் பிரிவிடம் தகவல் அளிக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க ஆவனம் செய்யப்பட்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தெரிவித்தது.

எல்லா இடங்களிலும் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்ட நிலையில் இரவு 8.58 மணிக்கு, வெடிகுண்டு தொடர்பாக வந்த தகவல் புரளி என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

அதுவரையில் பயணிகள் அனைவரின் பாதுகாப்பும் உறுதிச் செய்யப்பட்டது என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தெரிவித்தது.

பயணி ஒருவர், தனது பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக எழுதி வைத்திருந்தது, பின்னர் தகவலாக மாறி, வெடிகுண்டு புரளியாக மாறியது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

Related News

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு