கோத்தா கினபாலு, மார்ச்.10-
சபா மாநிலத்தில் உள்ள Kota Marudu, Paitan மற்றும் Pitas மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இன்று மாலை 4.20 மணி நிலவரப்படி மொத்தம் 418 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால், பேரிடர் நிலையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் தகவல் தளத்தின் படி, Kota Marudu மாவட்டத்தில் 398 பேர் நிவாரண மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Paitan மற்றும் Pitas மாவட்டங்களில் தலா 10 பேர் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சரவாக் மாநிலத்தின் கூச்சிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், 38 பேர் இன்னும் ஒரு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








