May 28, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் வைத்திருந்ததாக நால்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்ததாக நால்வர் மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.18-

இம்மாதம் முற்பகுதியில் 31 கிலோ எடை கொண்ட பல வகையான போதைப்பொருளைக் கடத்தியதாக தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒரு பெண் உட்பட நால்வர் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

32 வயது கே. சதீஸ்குமார், 43 வயது B. லெட்சுமணன், 18 வயது S. பவத்ராஜ் மற்றும் 30 வயது C. லாவண்யா என்று அந்த நால்வரும் மாஜிஸ்திரேட் அதிஃபா ஹாஸிமா வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் சதீஸ்குமார், லெட்சுமணன், பவத்ராஜ் மற்றும் லாவண்யா ஆகிய நால்வரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு ஜோகூர்பாரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி பின்னிரவு 12.15 மணியளவில் ஜோகூர், தெப்ராவ், ஜாலான் தெப்ராவ் 1 இல் உள்ள ஒரு அப்பார்மெண்ட் வீட்டில் இந்த நால்வரும் போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்