ஜோகூர் மாநிலத்தில் இன்று அதிகாலை 12 பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 209 வெளிநாட்டு பெண்கள் உட்பட 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பொழுதுபோக்கு மையங்களின் 13 நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் 44 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், 7 பேருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.








