Aug 9, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாவது வளர்ச்சித் திட்டமான RS-2-ஐ செயல்படுத்த சுமார் 33.31 பில்லியன் ரிங்கிட் நிதி தேவைப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி, மாநில சட்டமன்றத்தில் RS-2 அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமிருடின் ஷாரி, 2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான இந்த ஐந்தாண்டுத் திட்டத்திற்க்கான செலவை மாநில அரசாங்கம் மட்டுமே ஏற்காது என்றும், மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் மத்திய அரசும் நிதியளிக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் RS-2 திட்டத்தில் 6 முக்கிய இலக்குகள், 25 முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் 98 திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், பொருளாதார வளர்ச்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் அடங்குவதுடன், 2030-ஆம் ஆண்டிற்க்குள் 1.66 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய RS-1 திட்டத்தின் 79 சதவிகித இலக்குகள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து RS-2 உருவாக்கப்பட்டதாகவும் அமிருடின் தெரிவித்தார்.

இந்நிலையில், மாநிலத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால வளர்ச்சிக்கு RS-2 புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்