Aug 9, 2026
Thisaigal NewsYouTube
4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

நாட்டில் 4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்வதற்கான விரிவான சோதனை நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள தகவலில், உண்மையான அகதிகளையும், குடிநுழைவு அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காணும் வகையில் தற்போதைய தகவல் சேகரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அகதி அந்தஸ்து உறுதி செய்யப்படும் மியன்மார் நாட்டவர்கள், முதற்கட்டமாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான நடவடிக்கையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், தடுப்பு முகாம்களுக்கு வெளியே உள்ள மியன்மார் நாட்டவர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய அணுகுமுறை ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கி வருவதாக சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்