Aug 9, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

Share:

பினாங்கு, ஜார்ஜ் டவுன் ஜாலான் மெகலிஸ்டர் பகுதியில் இன்று காலை அவ்வழியே சென்ற பெரோடுவா அதிவா கார் மீது மிகப் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் அதில் பயணித்த மூவர் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.

காலை 9.12 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்தை வீரர்கள் அடையும் முன்னரே, பொதுமக்கள் அம்மூவரையும் காரிலிருந்து மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரம் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்து, போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்