கடந்த டிசம்பர் 2021 தொடங்கி பேராவில் மொத்தம் 27 புதிய வகை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் சம்பாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அளித்த மாநில மனித வளம், சுகாதாரம், இந்தியர் நல விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிடுகயில், கட்டுப் பன்றிகளியின் வாயிலாக 9 சம்பவங்களும் பண்ணைகளில் இருந்து 18 சம்பவங்களும் பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது வரையில் இந்த நோய்க்கானத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே, பாதுகாப்பு காரணமாக, இத்தொற்று மேலும் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளை முற்றாய் அழித்து கிருமி நாசிணியைத் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக சிவநேசன் கூறினார்.








