Aug 2, 2026
Thisaigal NewsYouTube
Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.02-

கிள்ளான் பகுதியில் வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் மற்றும் பல்வேறு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் கால்நடைச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

விலங்குகள் நலச் சட்டம் பிரிவு 29(1)(e)-ன் கீழ் விலங்குகள் மீதான கொடுமை குற்றச்சாட்டின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆயிரம் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரை அபராதமோ அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மேலும், இந்த விசாரணை நியாயமான முறையிலும், எந்தத் தரப்புக்கும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்தத் துறை உறுதியளித்துள்ளது.

கடந்த புதன்கிழமை கிள்ளான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த கிள்ளான் மாநகர் மன்றம், நாயின் உரிமையாளரின் பரபரப்பான நடவடிக்கையால் Rocky-யை உடனடியாக விடுவிக்க முடியாமல் அது உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

Related News

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு